பக்கங்கள்

31 டிசம்பர் 2012

சிறுமியை வன்புணர்வு செய்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்; வேலணை பிரதேச சபை கண்டனம்

மண்டைதீவில் நான்கு வயது சிறுமி வன்புணர்வின் பின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து அதிகப்படியான தண்டனையை நீதித்துறை வழங்க வேண்டும். இவ்வாறான குற்றவாளிகளை பிடிப்பதற்கு பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் துரித தேடுதலை மேற்கொள்ள வேண்டும். வேலணை பிரதேச சபை தலைவர் சி.சிவராசா குறித்த சம்பவத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகத் தலைவர் சி.சிவராசா மேலும் தெரிவித்ததாவது: மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தில் நான்கு வயது சிறுமியின் மீது வன்புணர்வின் பின்னரான கொலை என்ற செய்தியை பார்த்ததும் அதிர்ந்து போய் உள்ளோம். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை கண்டு பிடிக்க நேற்று முழுவதும் மண்டைதீவின் பல்வேறு இடங்களிலும் பல விசாரணைகளை மேற்கொண்டோம். எனினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தச் சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டிகளை கைது செய்து மிக கடுமையான தண்டனையை நீதித்துறை வழங்க வேண்டும். எமது நிர்வாக பிரிவுக்கு உட்பட்ட மக்கள் இந்தச் சோக சம்பவத்தினால் உறைந்து போயுள்ளனர். எனவே, இக் குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து மக்களும் கைகொடுத்து உதவ வேண்டும் என்று வேலணை பிரதேச சபைத் தலைவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.