பக்கங்கள்

29 டிசம்பர் 2012

கள்ளத் தொடர்பில் குழந்தையை பெற்று நிலத்தில் புதைத்த கல்நெஞ்சத் தாய் கைது!

அக்கரைப்பற்று - ஆலிம்நகர் பிரதேசத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்து நிலத்தில் புதைத்த இளம் தாய் ஒருவரை இன்று சனிக்கிழமை காலையில் கைது செய்ததுடன் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலையில் ஆலிம் நகர் குப்பைமடு வீதியில் உள்ள குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குழந்தை பெற்று புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கள்ளக்காதல் மூலம் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் கடந்த 24 ம் திகதி வீட்டில் குழந்தை இறந்து பிறந்துள்ளதாகவும் இறந்த குழந்தையை பொலித்தீன் பையினால் சுற்றி வீட்டின் நிலத்தில் புதைத்து உள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி இராமக்கமலன் சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.