பக்கங்கள்

12 டிசம்பர் 2012

பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் க.பொ.த சாதார தரப்பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருந்த மாணவி நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 16 வயதுடைய ரி.வினோதினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை பரீட்சைக்குச் சென்று திரும்பிய வினோதினி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டார் வெளியில் சென்று திரும்பி வந்து பார்க்கையிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை களவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.