பக்கங்கள்

19 டிசம்பர் 2012

29ம் திகதி இலங்கையில் சிறு பூமியதிர்வு ஏற்படும்-இலங்கை விஞ்ஞானி

உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிலும்  காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில் பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி என்பவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும். 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013 ஆம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாவும் அவர் சுட்டிக்காட்டினார். 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரசாரமாகும். ஆனால், எதிர்வரும் 29 ஆம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படவுள்ளது. இதன் தாக்கம் பாரியளவிலான பாதிப்புகள் ஏற்படாது. பூமியின் மீது 2013 இல் விண்கற்கள் விழும் என்று நான் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் எதிர்வு கூறினேன். அதன்பின்னர் இதுகுறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறு துண்டுகளாக உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கினர். அதேபோன்று, 2004 ஆம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவு இலங்கையில் இடம்பெறும் என்று 2002 ஆம் ஆண்டிலேயே கூறினேன். அதற்கு அமைவாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி தாக்கின. இவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முடிந்து விட்டன. எனவே 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது. 29 ஆம் திகதி இலங்கையில் பூமியதிர்வு ஏற்படும். இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். 2019 ஆம் அமெரிக்கா, ஆரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளை சந்திக்கும் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.