பக்கங்கள்

07 டிசம்பர் 2012

பிரதம நீதியரசரின் வெளிநடப்பு நியாயமானதே! - சட்டத்தரணிகள்

பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின் போது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இடைநடுவில் வெளிநடப்பு செய்தமை நியாயமான விடயம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணிகள் சிலர் இன்று (07) புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ள சிலரது நடவடிக்கையால் பிரதம நீதியரசருக்கு அத்தெரிவுக்குழு முன் ஆஜராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி பேசும் இந்த அரசின் பிரதிநிதிகள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் பிரதம நீதியரசரை நடத்தும் விதம் கவலைக்குரியது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.