பக்கங்கள்

08 டிசம்பர் 2012

நீதியரசருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர குற்றச்சாட்டுகள் போதாது; பதவி விலகுமாறு மஹிந்த இறைஞ்சல்!

ஐந்தில் மூன்று நிரூபிப்பு!ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றிரவு பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளில் ஒருவரான கந்தையா நீலகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதம நீதியரசரை, பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. தற்போதே தாம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான குற்றச்சாட்டுக்களை வாசித்ததாகவும் இந்த குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் அளவுக்கு போதுமானது அல்ல எனவும் ஜனாதிபதி நீலகண்டனிடம் கூறியுள்ளார். எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பின்வாங்க முடியாது எனவும் இதனால், பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு கூறுங்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவர் பதவி விலகினால், அவருக்கும், அவரது கணவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற முடியும் எனவும் ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.