பக்கங்கள்

14 டிசம்பர் 2012

சவேந்திர சில்வாவை தடுக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவின்  அமைதி காக்கும் பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் அதிகாரம் தனக்கு கியைடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகளே இதனைத் தீர்மானிக்க வேண்டுமெனவும், தாம் தனித்து இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா தற்போது லெபனானில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை கண்காணிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு அறிக்கை தயாராகி விடுமெனவும் பான் கீ மூன்  குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது பணிகளை உரிய முறையில் ஆற்றத் தவறியதாக பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட  பெட்ரி குழு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.