பக்கங்கள்

08 டிசம்பர் 2012

'புலி' அலரிமாளிகையிலேயே இருகின்றது: தம்மிக

புலிகள் மீண்டும் தலைத்தூக்கக்கூடும் என்றும் யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறிக்கொண்டு புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடுகின்றனர். ஆனால்,புனர்வாழ்வளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர். என்று ஜனநாய சோசலிச கட்சியின் உறுப்பினர் தம்மிக சில்வா தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜே.வி.பியினர் மலேரியா,டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணிக்கவில்லை அவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியையே மேற்கொண்டதன் காரணமாகவே மரணித்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியுமாயின் தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஏன்? தமிழர்கள் அஞ்சலி செலுத்தமுடியாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பலரும் தற்போது கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடவேண்டிய தேவையில்லை. கருணா,கே.பி மற்றும் பிள்ளையான் போன்ற புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.