பக்கங்கள்

27 டிசம்பர் 2012

அநுராதபுரத்தில் இன்று மஞ்சள் மழை!

அநுராதபுரம் - திரிப்பனே - லபுன்னெருவ பகுதியில் இன்று (27) வியாழனன்று காலை 9.30 மணியளவில் மஞ்சள் மழை பெய்துள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த மஞ்சள் மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் தம்புள்ளை, மெதிரிகிரிய, பதுளை ஆகிய பகுதிகளில் மஞ்சள் மழையும் பொலன்னறுவை, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் சிவப்பு மழையும் றுஹுணு பல்கலைக்கழகத்தில் மீன் மழையும் திஸ்ஸமகாராமவில் இறால் மழையும் மாத்தறையில் முதலை மழையும் பெய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.