பக்கங்கள்

13 டிசம்பர் 2012

சம்பந்தன் வெளிநாடுகளுக்கு வரக்கூடாதென புலம்பெயர் தமிழர் தடை-திவயின

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுதலைப்புலிகள் குறித்து பேச கூடாது  என அறிவுறுத்தி புலம் பெயர் தமிழர்கள் அவருக்கு புலிகள் பற்றி பேச தடைவிதித்துள்ளதாக திவயின கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் தம்மை தாமே அழித்து கொண்டனர் என சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையே இதற்கான காரணமாகும். அதேவேளை சம்பந்தனின் இந்த கருத்து தொடர்பில், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரது பேச்சு காரணமாக அவர், வெளிநாடுகளுக்கு வர இடமளிக்க போவதில்லை என புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் தெரிவித்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.