பக்கங்கள்

20 டிசம்பர் 2012

சிறுமி கர்ப்பம் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்குப் பிர தேசத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த, 14 வயதுச் சிறுமி கர்ப்பமடைந்தமை தொடர்பில் 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இந்தச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அச்சத்தின் காரணமாக அதனை அவர் யாரிடமும் சொல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் உடல் நிலையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர்கள் அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகின்றது. பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.