பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2012

வீட்டிற்குள் நுழைந்ததால் வயோதிபர்களிடம் வாங்கிக்கட்டிய சிப்பாய்! வன்னியில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தில் உள்ள செல்வபுரம் என்ற கிராமத்தில் வயோதிபத் தம்பதிகள் வசிக்கும் வீடொன்றுக்குள் நுழைந்த படைச்சிப்பாயை குறித்த வயோதிபத் தம்பதிகள் தாக்க முற்பட்ட பொழுது அந்தச் சிப்பாய் தப்பியோடியுள்ளார். செல்வபுரம் வடக்குப் பகுதியில் வயோதிபத் தம்பதிகள் தனியே வசித்து வந்தார்கள். அவர்களின் வீட்டுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் நுழைந்துள்ளார். படைச்சிப்பாயை தாக்க முற்பட்ட பொழுது அவர் தப்பியோடினார். அப்பொழுது அவரை பிடிக்க ஊர் மக்கள் துரத்திச் சென்றனர். குறித்த படைச்சிப்பாய் 500 மீற்றர் தூரத்தில் உள்ள இராணுவமுகாம் ஒன்றிற்குள் பதுங்கிக் கொண்டார். இதைப்போலவே சம்பவ தினத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவும் ஒரு சம்பவம் நடைபெற்றதாக செல்வபுரம் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இராணுவத்தின் அராஜகம் குறித்து உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.