பக்கங்கள்

23 ஆகஸ்ட் 2012

பிள்ளையான் ஓரங்கட்டப்படுகிறார்!

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா அமைச்சர்கள் பலரும் நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. கோத்தாபாய ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து ஆராய இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து ஆராயப்பட்ட முக்கியமான இந்தக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்காதது அவர் சிறிலங்கா அரசினால் ஓரம்கட்டப்படுகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா, “சந்திரகாந்தன் இப்போது முதல்வர் இல்லை. ஆகவே அந்தக் கூட்டத்தில் பங்கற்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை. சந்திரகாந்தன் இந்த நிகழ்வில் பங்கேற்காததால், சிறிலங்கா அரசாங்கம் அவரை ஓரம்கட்டுகிறது என்ற முடிவுக்கு வரமுடியாது.” என்று தெரிவித்துள்ளார். செப்ரெம்பர் 8ம் நாள் கிழக்கு மாகாணசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில், ஆளும்கட்சி வெற்றியீட்டினால் சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. சிறிலங்காவின் பிரதியமைச்சர் முரளிதரனின் சகோதரி இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை கிழக்கு முதல்வராக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.