பக்கங்கள்

20 ஆகஸ்ட் 2012

புலிகளின் விஞ்ஞானிப் போராளி டனிஸ் மாஸ்டர் படைகளிடம் சிக்கினாரா?

புலிகளின் விஞ்ஞானிப் போராளி டனிஸ் மாஸ்டர் இராணுவத்திடம் சிக்கினாரா ?இறுதி யுத்தத்தின்போது, புலிகளின் விஞ்ஞானிப் போராளியான டனிஸ் மாஸ்டரும் இராணுவத்திடம் சிக்கினார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிகளின் ஆரம்பகால உறுப்பினரான இவர் எம்.ஓ(MO) பிரிவில் இருந்தார். புலிகள் இயக்கத்துக்கு பல ஆண்டுகாலமாக இவர் ஆயுதத்தளவாடங்களைத் தயாரித்துகொடுத்ததோடு, நீர் மூழ்கிக் கப்பல் பலதையும் உள்ளூரில் தயாரித்து காட்டினார். புலிகள் பாவித்த பல நீர் மூழ்கிக் கப்பல்கள் டனிஸ் மாஸ்டரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரில் இவரை இராணுவம் கைதுசெய்ததாகவும், இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது. நீருக்கு அடியில் பயணம் செய்து கடலுக்கு அடியில் புலிகள் நடத்திய பல தாக்குதல்களுக்கு, பொறிமுறைகளை வகுத்து, அதற்கான உபகரணத்தை வடிமைத்தவர் டனிஸ் மாஸ்டரே. புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஒரு முறை கிளாலிக் கடற்பரப்பு ஊடாக கிளிநொச்சிக்கு மாற்ற, இவரது படகு வடிவமைப்பு பெரிதும் உதவியது. தனிப்பட்ட முறையில் இவர் படகுகளை வடிவமைக்கும் திறன் கொண்டவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.