பக்கங்கள்

07 ஆகஸ்ட் 2012

நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்காவும் , பான் கீ மூனும் வற்புறுத்தினார்கள் - என்ற செய்திக்கு நவநீதம்பிள்ளை மறுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், இதனை நவநீதம்பிள்ளை மறுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இவ்வாறு பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.