பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2012

பயணிகள் ஊர்தியில் சென்ற இளைஞரை தள்ளிக்கொன்ற நடத்துனர்!

வவுனியா பஸ்ஸில் பயணிக்க டிக்கெட் கேட்ட தமிழ் இளைஞர்கள் பெருமபான்மையின நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தள்ளி வீழ்த்தப்பட்டதால் படுகாயமடைந்த சம்பவமொன்று இன்றிரவு யாழ்.நகரில் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தை பஸ்தியான் சந்திப்பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் மூவர் வவுனியா செல்ல பணத்தை செலுத்த முற்பட்டுள்ளனர். வழமையாக யாழ்ப்பாணம் – வவுனியா கட்டணமாக ரூபா 180 மட்டுமே அறவிடப்பட்டுவருகின்றது. எனினும் குறித்த பேருந்தின் நடத்துனரோ ரூபா 250 இனை கட்டணமாக செலுத்த பணித்துள்ளார். அதையடுத்து அவருடன் முரண்பட்ட இளைஞர்கள் பற்றுச்சீட்டினை சமர்ப்பித்தால் குறித்த கட்டணத்தை செலுத்த சம்மதித்தனர். அவ்வேளையில் நடத்துனர் மற்றும் சாரதியுள்ளிட்டவர்கள் இளைஞர்களை தாக்க தொடங்கியுள்ளனர். அத்துடன் இவர்களை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு பேருந்தினை இயக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளையில் சில்லினுள் அகப்பட்டு இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களை தாக்க தொடங்கினர். அத்துடன் அவர்களை பொலிஸாரிடம் கையளித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்பிற்கான பாதையனுமதி தமிழ்த் தரப்புக்களுக்கு மறுதலிக்கப்பட்டு பெருமளவில் அரசியல் செல்வாக்கில் தெற்கை சேர்ந்தவர்களுக்கும், மற்றும் ஈபிடிபிக்கு பெருமளவில் இலஞ்சம் வழங்கி அனுமதி பெற்ற தமிழ் பஸ் உரிமையாளர்களால் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி நள்ளிரவு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.