பக்கங்கள்

12 ஆகஸ்ட் 2012

டெல்றொக்சனின் மரணத்திற்கு மகிந்த அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!

டெல்றொக்சனின் மரணத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் முடிந்த பின்பு நாம் அனைவரும் எண்ணியிருந்தோம் நாட்டில் சமாதானத்துடன் வாழலாம் என்று ஆனால் இப்போது நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் இன்னும் யுத்தம் முடிவடையவில்லை என்று தெளிவாக தெரிகின்றது. டெல்றொக்சன் இறந்தது நோயினாலோ அல்லது வீதியில் நடந்து அவர் விபத்திலோ கொல்லப்படவில்லை.அரச பாதுகாப்புக்களுடன் கூடிய ஒரு சிறைச்சாலையில் இருக்கும் போது தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றான். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.இங்கு கூடியிருக்கின்ற எங்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது.இவரை கொலை செய்தது யார் என்று அரசு வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார் ஏன் இந்தக் கொலைக்கு மக்கள் முன்னிலையில் வந்து மன்னிப்புக் கோரமுடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கொலையினை தெற்கின் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் ஏன் நிமலரூபன்,டெல்றொக்சன் போன்ற கைதிகளுக்கு கிடைக்கவில்லை. எனியும் நாம் பொறுத்திருக்க முடியாது சடலத்திம் முன்நின்று கூறுகின்றோம்.இந்தக் கொலைக்கு எதிரான நடவடிக்கை எடுப்போம் இந்தக் கைதி இன்று இறந்துவிடமில்லை வீரமரணம் அடைந்துள்ளார் எனவே நாம் அனைவரும் இவருக்கு வீர வணக்கத்தை தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.