பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2012

தமிழக முகாம்களில் தொடர்கதையாகிவிட்ட மரணங்கள்!

தமிழ்நாடு,திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வறண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி(வயது-35),அவரது மகன்மாரான வினோத்(வயது-12), கௌதம் (வயது-7)ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தீயில் கருகிய நிலையில் சடலங்கள் கானப்படுவதால் மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.