பக்கங்கள்

27 ஆகஸ்ட் 2012

துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் பலி!

ஹொரண, மொரகஹஹெனப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 32 வயதான தந்தை ஒருவரும் 4 வயதான மகள் ஒருவரும் இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் தாயார் காயமடைந்த நிலையில் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 3 பேரும் சைக்கிளில் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது இவர்கள் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.