பக்கங்கள்

07 ஆகஸ்ட் 2012

கனடாவில் வாகன விபத்து: இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஸ்தலத்திலே பலி!

கனடாவின் டொரன்டோ நகரில் QEW தேசிய நெடுஞ்சாலை 427ல் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்நத தந்தையும் மகளும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தபோதுஇஎதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இறந்த பெண்ணின் தாயார் என கருதப்படும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்திற்கு காரணமான எதிரே வந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.