பக்கங்கள்

15 ஆகஸ்ட் 2012

பொன்னாலையில் விஷமிகள் குடிதண்ணீர் கிணற்றை மாசுபடுத்தினர்!

newsபொன்னாலைப் பகுதியில் வயல் வெளியில் அமைந்திருந்த நன்நீர் கிணற்றுக்குள் கழிவு ஓயில்,குப்பைகளைக் கொட்டி விஷமிகள் குடிதண்ணீரை மாசுபடுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு விஷமிகள் இந்த நாச வேலையைச் செய்துள்ளதால் அந்த கிணற்றில் குடிதண்ணீரைப் பெற்றுவந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பொன்னாலை குளத்துக்கு அருகில் இருந்த கிணறும் தற்போது பாவனைக்கு உதவாத தண்ணீராக மாறியுள்ளது. குறிப்பாக இந்த கிணற்றுக்கு மேலாக சூரிய ஒளி படாத வகையில் சிமெந்தால் மூடிக்கட்டப்பட்டு சிறிய துவாரம் மட்டும் விடப்பட்டுள்ளது. இதனால் கிணற்றுக்குள் வௌவால்கள் குடிகொண்டு தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றன. குறித்த கிணற்றின் மூடியை அகற்றிச் சுத்தப்படுத்தி தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாம் பலதடவைகள் கேட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதிக்கான குழாய் மூலமான நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெறுகின்றது.வயல் வெளியில் எஞ்சியிருந்த கிணற்றையும் விஷமிகள் அசுத்தம் செய்துள்ளனர்.இதனால் தற்போது குடிநீரைப் பெறுவதில் தாம் நீண்ட தூரத்துக்கு அலையவேண்டி ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 22ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் குளத்துக் அருகிலிருக்கும் கிணற்றையாவது தூய்மைப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுமாறு மீண்டும் தாம் கோரிக்கை விடுப்பதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.