பக்கங்கள்

22 ஆகஸ்ட் 2012

தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது! மனோ கணேசன்

தமிழர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னிணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தமிழர்கள் சட்டவிரோதமானமுறையில் புகலிடம் கோரக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக நாட்டில் இருந்து கொண்டே உரிமைகளுக்காக போராட வேண்டுமென அவர்வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களைப் போல் அன்றி தற்போது போராடுவதற்கான ஜனநாயக சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நிலவிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இலங்கையில் இருந்து கொண்டே ஜனநாயக ரீதியானபோராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு இலங்கையில் நிம்மதியாக வாழக் கூடிய ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என மனோ கணேசன்தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் நில பிரதேசங்களில் தமிழர்களின் எண்ணிக்கைகுறைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை தற்போதைக்கு வழங்க முடியாது எனவும் எதிர்காலத்தில் சான்றுகளுடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.