பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2012

கொழும்பு ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய் இறைச்சி விற்பனை!!!

கொழும்பில் அதிகளவான தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கொழும்பின் பலவேறு பகுதிகளில் நாய்கள் காணாமல் போயுள்ளதை பொலிஸ் மற்றும் விலங்குகள் நல அமைப்புக்கள் உறுதிசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசர் நாய்கடி சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதற்கு காரணம் கொழும்பில் தெரு நாய்கள் அதிகரித்தமையே என கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் கொழும்பு விகாரமாதேவி பூங்கா மற்றும் அதனை அண்டிய பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன. இந்தநிலையில் கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார். விலங்கு நலம் மற்றும் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜயதிலகே தெரு நாய்கள் காணாமல் போவதாக உறுதி செய்துள்ளதுடன் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகணவும் தெருநாய்கள் காணாமற் போனது தொடர்பாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்தவாரம் கொலன்னாவையை நோக்கிச் சென்ற வாகனத்தில் தெருநாய்களைப் பிடித்து ஏற்றிச் சென்றதை சிலர் பார்த்துள்ளதாகத் தெரிவித்தனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார் என் அவ் ஆங்கில வார இதழ் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.