பக்கங்கள்

29 ஆகஸ்ட் 2012

கனகாம்பிகைக்குளத்தில் குப்பைக்குள் குண்டு! இளைஞர் படுகாயம்!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் கைவிடப்பட்ட வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில், கிளிநொச்சியில் உள்ள ஐ.நா தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும், யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த, தியாகராஜா யோகசீலன் என்ற 29 வயதுடைய இளைஞனே காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த இளைஞன், தான் வசித்து வருகின்ற வீட்டின் முற்றத்தைக் துப்பரவு செய்து குப்பைகளை எரித்தபோது, குப்பையுடன் கிடந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. வெடித்துச் சிதறிய துண்டுகள் பாய்ந்ததில் இரண்டு தொடைகளிலும் காயமடைந்த குறித்த இளைஞன் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.