பக்கங்கள்

27 ஆகஸ்ட் 2012

மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதி கோமா நிலையில்; காலி சிறையிலும் சோகம்!

காலி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கடந்த வாரம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அச் சம்பவத்தில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் என்ற 34 வயது இளைஞனே இவ்வாறு கோமா நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 21ம் தகிதியே காலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் திகதி வெள்ளிக்கிழமை வழைமை போன்று தனது கணவனை பார்வையிடப்போன மனைவிக்கு அவர் காலி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக அறியத்தரப்பட்டது. அதையடுத்து காலி சிறைக்கு தேடிச் சென்ற வேளையிலேயே கோமா நிலையில் தனது கணவரை அவர் கண்டுள்ளார். இந் நிலையில் இங்கு இடம்பெற்ற தாக்குதலில் பல கைதிகள் காயமடைந்திருக்கலாம் எனவும் பலர் சிகிச்சை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைதியான சதீஷ்குமாருக்கு கவிதா எனும் மனைவியும் சாகித்யா எனும் சிறு குழந்தையும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.