பக்கங்கள்

17 ஆகஸ்ட் 2012

தங்கச் சங்கிலியை பறித்த சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

பெண் மருத்துவர் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட முச்சக்கர வாகன சாரதி ஒருவர் உட்பட சந்தேக நபர்கள் இருவரை ஓகஸ்ட் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நேற்று உத்தரவிட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீதியொன்றில் இம்மருத்துவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரின் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை முதலாவது சந்தேக நபர் பறித்துச் சென்றதாகவும் பின்னர் அவர் முச்சக்கர வாகனமொன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றதால் இச்சம்பவத்திற்கு எதிராக மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் மருதானை பொலிஸ் பொறுப்பதிகாரி லுஷான் சூரியபண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண, உதவி இன்ஸ்பெக்டர் மதுர விதான ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதையடுத்து அடகு நிலையமொன்றிலிருந்து மேற்படி தங்கச் சங்கிலி மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இச்சந்தேக நபர்களை ஓகஸ்ட் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்துமாறும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.