பக்கங்கள்

01 அக்டோபர் 2014

தோசை சாப்பிட்ட தாய் மரணம்!

மகள் சுட்டு கொடுத்த தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்த  தாய் ஒருவா் அது தொண்டையில் சிக்கியதால் உயிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று புத்தூர் நவக்கிரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த தாயார் திடீரென சுவாசிக்கச் சிரமப்பட்டதாகவும் உடனடியாக அவரை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவா் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடா்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிசாா் மேற்கொண்டு வருகின்றனராம்.ம.நிா்மலாதேவி, வயது 60 என்பவரே இவ்வாறு உயிரிழந்த தாய் என தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.