பக்கங்கள்

17 அக்டோபர் 2014

மகிந்த வரவால் நெடுந்தீவு ஆசிரியர்களுக்கு வந்தது செலவு!

மஹிந்தவின் தீவக விஜயத்தின் போதான செலவுகளை ஆசிரியர்களது தலையில் கட்டியடிக்க முற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மஹிந்தவின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு பாடசாலையில் ஏற்பட்ட செலவுகளை ஆசிரியர்களே பொறுத்துக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திப்பதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.நெடுந்தீவிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்களை இவ்விடயத்தனில் அதிபர் நிர்ப்பந்தித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மஹிந்த யாழ்ப்பாணத்தில் தங்கி நின்று பல இடங்களிற்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். குறிப்பாக மூன்றாம் நாளன்று தீவுப்பகுதிகளுக்கு சென்றிருந்த வேளை நெடுந்தீவிற்கும் சென்றிருந்தார். இங்கு நெடுந்தீவு மகா வித்தியாலயத்திற்குச் சென்று மகிந்தோதயா ஆய்வு கூடத்தையும் திறந்து வைத்திருந்தார்.இதற்காக ஐனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பாடசாலையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல்வேறு அலங்கரிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.இதற்காக கல்வித் திணைக்களத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிதி போதாததால் மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் கணக்குக் காட்டியுள்ளார். ஆகவே இதனை குறித்த பாடசாலையிலுள்ள 16 ஆசிரியர்களுமே வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.ஆயினும் இதற்கு ஆசிரியர்கள் சம்மதம் தெரிவிக்காத போதும் குறித்த பாடசாலையின் அதிபர் அமைச்சர் டக்ளஸின் ஆசி பெற்றவர் என்றும் அவரை முன்னிறுத்தி ஏதும் பழிவாங்கலில் ஈடுபடலாமெனவும் ஆசிரியர்கள் அச்சம் கொண்டுள்ளதால் இச் சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.