பக்கங்கள்

05 அக்டோபர் 2014

வட்டக்கச்சியில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

ஆவணப்படம்
கிளிநொச்சி வட்டக்கச்சி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் சனிக்கிழமை(நேற்று) மாலை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இராமநாதபுரம் புதுக்காடு பகுதியை சேர்ந்த கருணாநிதி கோகுலகீதன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு, நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற வேளையிலேயே மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார்.சடலம் மீட்கப்பட்டு, பிரதேச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.மேற்படி மாணவன் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்று வந்தவர் ஆவார்.இதேவேளை, கிளிநொச்சி கந்தன் குளத்தில் நீரில் மூழ்கி கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி மூன்று சிறுமிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.