பக்கங்கள்

19 அக்டோபர் 2014

யாழில் பியர் விற்பனை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த பன்னிரெண்டு வருடங்களில் பியர் பாவனையாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமால் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட வணிகர் கழக மண்டபத்தில் வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு பியர் பாவனையானது 5 லட்சத்து 55 ஆயித்து 304 லீற்றராக இருந்தது. இந்த நுகர்வு கடந் 2013 ஆம் ஆண்டில் 40 லட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றராக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது இளைய தலைமுறையினர் தவறான பாதையில் இட்டுச் செல்லப்படுகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இதுகுறித்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிக அக்கறை காட்டவேண்டியது அவசியமாகும்.என வணிகர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.