பக்கங்கள்

12 அக்டோபர் 2014

மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது!

போர்க்குற்றவாளியின் வரவை ஒட்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் யாழ் சுகாதாரப் பகுதியினர் முற்றவெளிப் பிரதேசத்தில் நேற்றிரவு நுளம்பை ஒழிப்பதற்காகப் புகையூட்டும் பணி நடைபெற்றது.மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது என்பது டக்ளஸ் குழுவின் எதிர்பார்ப்பாம். இதனால் யாழ். வீரசிங்கம் மண்டபத் தைச் சூழ உள்ள பகுதியில் இந்தப் புகையூட்டும் பணிகள் மஹிந்தவிற்காக இடம்பெற்றன. அத்துடன் முற்றவெளி பகுதியைத் தூய்மை யாக்கும் பணியில் சுகாதார பகுதினர் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டுவருகின்றனராம். அதேவேளைஇ வீரசிங்கம் மண்டபத்தில் உள்ள நன்னீர் கிணற்றின் குடிநீரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கிணற்று நீரில் ஏதாவது தொற்று கிருமிகள் உண்டா என்பதைக் கண்டறிவதற்காகச் சுகாதாரப் பகுதியினர் அதன் மாதிரியை எடுத்து சென்றனர்.மஹிந்த தான் மனிதன் மற்ற குடா நாட்டு மக்கள் எல்லோரும் மிருகங்களா? இந்த வேலையை ஒழுங்காக வாரம் தோறும் செய்தாலுமே யாழ் குடா நாட்டில் டெங்கினையும் வயிற்றோட்டத்தினையும் கட்டுப்படுத்தலாம் அல்லவா?

நன்றி:ஈழநாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.