பக்கங்கள்

24 அக்டோபர் 2014

காணாமற்போன பெண் சடலமாக கண்டுபிடிப்பு!

காணாமற்போயிருந்த பெண்  முள்ளியில் சடலமாக மீட்பு!நாகர்கோயில் பகுதியில் காணாமற்போயிருந்த இளம் தாயொருவர் வடமராட்சி முள்ளிப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வடமராட்சி, நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது - 36) என்பவர் காணாமற்போயுள்ளார் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை முள்ளிப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற சிலர் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சடலம் அழுகிய நிலையில் உருக்குலைந்து காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் பருத்தித்துறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் சடலத்தைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

நன்றி!மலரும்.கொம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.