பக்கங்கள்

23 அக்டோபர் 2014

புலிகளுடன் தொடர்பு என்பது பொய்யென துரைராஜா மறுப்பு!

ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை 2009-ம் ஆண்டில் புதுப்பித்த செல்வாசுக் நிறுவனம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று இலங்கையில் வெளியாகும் குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிதி நிறுவனம் ஒன்றுடனேயே குறித்த கட்டடத்தை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததை தான் பதவியேற்றபோது கண்டுபிடித்ததாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தமாரா குணநாயகம் அண்மையில் பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.தமாரா குணநாயகத்துக்கு முன்னதாக ஜெனீவாவில் பணியாற்றியவர், தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளராகவுள்ள ஷெனுக்கா செனவிரட்ண.ஷெனுக்காவின் காலத்திலேயே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் வேலை நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜேவிபியும் குற்றம் சாட்டிவருகின்றது.2012-ம் ஆண்டில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் நால்வர் சுவிட்சர்லாந்துக்கு சென்று நடத்திய ஆய்வின் முடிவில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகின்ற அறிக்கை ஒன்றையும் ஜேவிபி ஊடகங்களுக்கு கசியவிட்டிருந்தது.இந்த பின்னணியிலேயே, இலங்கைப் பிரதிநிதியின் இல்லத்தை புதுப்பித்துக் கொடுத்த செல்வாசுக் நிறுவனத்தின் உரிமையாளர் பி.டி. துரைராஜா பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.தமது நிறுவனத்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி வெளியான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார்.தான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் துரைராஜா தமிழோசையிடம் கூறினார்.இதே நேரம்"தான் புலிகளின் ஒரு சிலரால்(சுவிசில் உள்ள)மிரட்டப்பட்டதாகவும் துரைராஜா பிபிசீக்கு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.