பக்கங்கள்

14 அக்டோபர் 2014

தீவகத்தில் மகிந்தோதய!

வடபகுதிக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ஷ நெடுந்தீவிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பிரதேச செயலகக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கின்றார்.இதனிடையே நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.இதனிடையே வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டிடத்தை திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ள மகிந்த ராஜபக்ஷ ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய ஆய்வுகூடங்களையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ளார்.இந்த நிகழ்வுகளில் சிறீலங்காவின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.இன்றைய நிகழ்வுகளை நிறைவு செய்யும் மகிந்த ராஜபக்ஷ மாலை கொழும்புக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.