பக்கங்கள்

21 அக்டோபர் 2014

இந்தியப்படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு கடமையில் இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேரின் 27 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 1987ஆம் ஆண்டு இதே தினத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவம் அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட 21பேரையும் நோயாளர்கள் 60 பேரையும் சுட்டுக்கொன்றனர் என்பது தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.