பக்கங்கள்

05 அக்டோபர் 2014

குறிகாட்டுவானில் வடதாரகை!

சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நெடுந்தீவுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள நிலையில் ஒரு வருட காலமாக யார் கண்ணிலும் படாமல் ஓய்வெடுத்த வடதாரகைப் படகு நேற்றைய தினம் திடீரென குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு கடற்கடையினரால் கொண்டுவந்து விடப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் இதுவரை காலமும் வடதாரகை கடற்படையினரின் கைவசமிருந்தது. இது தொடர்பில் பல தரப்பினராலும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது. ஆனாலும் மக்கள் பயன்பாட்டுக்காக வராத வடதாரகை தற்போது மகிந்தவின் வருகையை முன்னிட்டு தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.