பக்கங்கள்

29 அக்டோபர் 2014

மலையகத்தில் மண்சரிவில் புதையுண்டனர் மக்கள்!

மீரியபெத்த பகுதியில்  பெரும் மண்சரிவு!  400 பேர் வரையானோர் மாயம்!! 14 சடலங்கள் மீட்பு!!!ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீரியபெத்த பிரதேசத்தில் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெய்துவரும் கன மழை காரணமாக தற்போதும் மண்சரிவு ஏற்பட்டவண்ணமுள்ளதாக கொஸ்லந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் 14 சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். மண்சரிவில் சிக்கி 400 பேர் வரையானோர் காணாமற்போயுள்ளனர் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக 8 லயன்களும் 5 கோட்டஸ்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளன என தெரியவருகிறது. அங்கு வசித்த மக்கள் குறித்து தெரியவரவில்லை என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.மலையகத்தில் மண்சரிவில் புதையுண்டனர் மக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.