பக்கங்கள்

08 அக்டோபர் 2014

பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்!

ஆவணப்படம்
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவிருந்த நிலையில் பிரஜைகள் குழுவின் தலைவர் இன்று இரவு (8.10) 7.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,நெடுங்கேணியில் உள்ள எனது கடையை மூடிவிட்டு எனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது நெடுங்கேணிக்கும் பெரியகுளத்திற்கும் இடைப்பட்ட வயல்வெளிப்பிரதேசத்தில் வைத்து நான் தாக்கப்பட்டேன். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரில் இருவர் என்னை சிறிய கால்வாய் ஒன்றினுள் தள்ளி இரும்புக்கம்பிகளால் தாக்கினர். இதன் காரணமாக எனது கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து என்னை தாக்கிய இரும்புக்கம்பிகளில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் வைத்தியசாலைக்கு செல்லுமாறு தெரிவித்தனர். இதனையடுத்து நான் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அத்துடன் பொலிஸார் என்னிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.இவ்வாறு செய்திக்குறிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.