பக்கங்கள்

30 செப்டம்பர் 2014

மட்டக்களப்பு சிறைக்குள் மோதல்!

மட்டக்களப்பு மத்திய சிறைச்சாலைக்குள் நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் கே.புஸ்பராஜா (வயது 23), ஏ.எம்.ஜமீல் (வயது 22), எஸ்.எல்.ஏ.ரினோல்ஸ் (வயது 22) ஆகியோரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர். சிறைக் கைதிகளின் இரு பிரிவினருக்கு இடையே தொடங்கிய வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியது எனவும் இதன்போதே இந்த மூவரும் காயமடைந்தனர் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் மோதலில் ஈடுபட்டவர்கள் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தண்டனை பெற்று வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.