பக்கங்கள்

10 அக்டோபர் 2014

குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை!

முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குமார் குணரட்னத்தின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்படும் ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது.நாட்டுக்கு எதிரான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி குமார் குணரட்னத்திற்கு இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த சில காலங்களாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில் குமார் குணரட்னத்தின் பெயரை இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாத கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் இணைத்துள்ளது.இதேவேளை, வீசா இன்றி நாட்டு;க்குள் தங்கியிருந்தமைக்காக கடந்த 2012ம் ஆண்டு நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் தொகை இதுவரையில் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.குமார் குணரட்னத்திற்கு எதிரான அபராதப் பணத்தை கட்சி செலுத்த உள்ளதாக முன்னணி சோசலிச கட்சி அறிவித்திருந்தது.எனினும் இதுவரையில் அபராதத் தொகை செலுத்தப்படவில்லை.ஜனாதிபதி தேர்தலில் குமார் குணரட்னத்தை கட்சியின் சார்பில் போட்டியிட செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.