பக்கங்கள்

09 மார்ச் 2014

சர்வதேச விசாரணையே கோருவோம்-பிரித்தானியா

இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது.இலங்கை மீது சர்வதேச விசாரணையை ஜெனீவா பிரேரணை கோரவில்லை என்று தமிழ் தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்ற நிலையில் பிரித்தானியா தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது பிரித்தானிய அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் இலங்கையின் செய்;திதாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமது அரசாங்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரும் என்று வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை கோரப்படவுள்ளதாக ஹியுகோ குறிப்பிட்டுள்ளார. இந்தநிலையில் இலங்கை மீதான விசாரணைக்காக பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.