பக்கங்கள்

19 மார்ச் 2014

மீண்டும் வந்து விட்டார்கள் புலிகள் என்கிறது அரசு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளது. கே.பி. செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவரின் தலைமையில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைந்து வருவதாக அரசாங்கப் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கில் வேலையில்லாத இளைஞர்களை அணி திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீள எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கோபியை கைது செய்யும் முனைப்பில் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இந்த தேடுதல் வேட்டைகளின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.