பக்கங்கள்

12 மார்ச் 2014

அமெரிக்க தீர்மானத்தில் மாற்றம் வருமா?-திருமுருகன்

அமெரிக்க தீர்மானத்தில் மாற்றம் வருமா என பல தோழர்கள் கேட்கிறார்கள். வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடிப்படை கேள்வியே , எவ்வகையான மாற்றங்களை அது கொண்டு வரப் போகிறது என்பது தான். ஐ.நாவின் விதிமுறைப்படி (வந்திருக்கவேண்டிய) வரவேண்டிய விசாரனை என்பதை தமிழருக்கான நீதி கிடைக்கும் வழிமுறையாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா-இந்தியா முன்மொழியும் தீர்மானத்தில் சர்வதேச சுதந்திர விசாரனை இலங்கை -விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையாக வரும் பொழுது, இனப்படுகொலை என்கிற நிலைப்பாடு மறுக்கபடும். தமிழ் இனம் என்கிற ஒன்றினை மறுக்கும் அமெரிக்கா எவ்வாறு தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணையை கேட்கும்? … அமெரிக்க இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும், ஐ.நா நிபுணர் குழுவில் முன்வைக்கப்பட்ட , “மக்கள் கருத்துப்பங்கேற்பினையும்” தமது தீர்மானத்தில் “ஆபரேடிவ்-செயலாக்க” பகுதியில் கொண்டு வரும் பட்சத்தில் மட்டுமே அமெரிக்காவின் நேர்மையை மெட்ச முடியும். பிரச்சனை என்னவென்றால், இங்கே அமெரிக்காவினை ஆதரிக்கிற அல்லது மென்மையாக கட்டுரையில் மட்டும் விமர்சிக்கிற நண்பர்கள் , இது நாள் வரையில் “போர்க்குற்றம், இருதரப்பு விசாரனை” என்கிற நிலைப்பாட்டினையே எடுத்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது ஒரு சிலர் போனால் போகிறது என்று ‘இனப்படுகொலை விசாரணை கேட்போம், ஆனால் போர்க்குற்ற விசாரனை வந்தால் அதை மறுக்க மாட்டோம்’ என்றும் அறிவிக்கப்படாத ‘ஆப்சனல்’ முறையை வைத்திருக்கிறார்கள். (காமன்வெல்த் இலங்கையில் நடக்கக்கூடாது , அப்படி நடந்தால் இந்தியா பங்கேற்க கூடாது என்று வைத்திருந்ததைப் போல. எதிர்ப்பில் பல ”ஆப்சன்” பட்டன்கள் கொடுக்கப்படுகின்றன. எது வசதியோ/கிடைக்கிறதோ அதை அழுத்திக் கொள்ளலாம்.) அமெரிக்காவும்-இங்கிலாந்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கொண்டுவருவார்கள். அப்படி நியாயவான்கள் கொண்டு வரக் கூடிய கடினமான எதிர்ப்பு தீர்மானத்தினை இந்தியா நீர்த்துப் போகச் செய்துவிடாமல் தடுப்பது நமது வேலை என்று எங்களுக்கு இலவசமாக பல அட்வைஸ்கள் கிடைத்தன. தம்மால் தான், தமது லாபியால் தான் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது என்றும், இந்தியாவிற்கு தெரியாமல் அமெரிக்கா தீர்மானத்தினை தயார் செய்கிறது என்றெல்லாம் நம்புகிறார்கள்.. ஆனால், இருதரப்பினரையும் (இலங்கை-புலிகள்) விசாரிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாட்டினை எப்பொழுதும் கேள்வி எழுப்ப மாட்டோம், என்பது தான் நெருடலாக இருக்கிறது. இதுவரை அதைப் பற்றி மெளனம் காக்கவே செய்கிறார்கள். புலிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து முடக்கவேண்டுமென தமது அரசு(அமெரிக்க அரசு) எடுக்கும் நிலைப்பாடு சரி என நினைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.