பக்கங்கள்

18 மார்ச் 2014

தமிழ் பெண் சிப்பாய் கொடுமைகளை விபரித்திருக்கிறார்!

சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் 23 வயதான இளம் தமிழ் இராணுவப் பெண். தான் இராணுவத்தில் சேர்ந்த பின் தன்னையும் தன்னைப் போன்ற மற்றைய தமிழ்ப் பெண்களையும் முறை வைத்து இரவில் உயரதிகாரிகளின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தாங்கள் அதற்கு உடன்படாத சந்தர்ப்பங்களில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களில் சிலர் கருத்தரித்து பின்னர் அது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு கலைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அங்கு சிங்களப் பெண் இராணுவச் சிப்பாய்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன்­ ஒரு பெண் தமிழ்ச் சிப்பாய் இராணுவத்தில் இருந்து விலகி ஓடிய போது அவர் பின்னர் பிடிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.