பக்கங்கள்

01 மார்ச் 2014

அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு திரட்டும் பணியில் நா.க.தமிழீழ அரசு!

தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக, புலம்பெயர் தேசங்களில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சமூக -அரசியற் பிரதிநிதிகளின் தோழமையினைத் திரட்டும் முன்னெடுப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி, பன்முகத்தளத்தில் தனது செயற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மனிதஉரிமைத்ததளத்தில் இந்த ஆதரவு திரட்டலை மேற்கொண்டு வருகின்றது. பிரென்சு நகராட்சி சபைகக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அக்களத்தில் வேட்பாளர்களாகவுள்ள பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்களினது கவனத்திற்கு தமிழினப்படுகொலை விவகாரத்தினை கொண்டு செல்லப்படுவதோடு, அனைத்துலக விசாரணைக்கான அவர்களது ஆதரவினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் மக்கள் பிரதிநிதிகள் திரட்டி வருகின்றனர். இதேவேளை உயர்கல்வி மாணவர்களது சிந்தனைவட்டமாக பல்வேறு நாடுகளில் இயங்கும் CNRJஅமைப்பின் தலைவர் Frédéric Fappani அவர்கள், சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான ஆதரவினை வழங்கியுள்ளார். இவ்வாறு புலம்பெயர் தேசங்களில் திரட்டப்படும் இந்த ஆதரவுக் கோவை, அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கும், ஐ.நா மனித உரிமைச்சபைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சினால் மொத்தமாகவும் சமர்பிக்கப்படவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், அரசியற்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.