பக்கங்கள்

10 மார்ச் 2014

புதிய இனவழிப்பு ஆதாரம்!(எச்சரிக்கை:காணொளி கொடூரமானது)

போர்க்குற்றங்கள் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக 'சனல்4' செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது. அது தொடர்பான காணொலி நாடாவையும் வெளியிட்டிருக்கிறது. இறந்த பெண் போராளிகளின் சடலங்கள் மீது திரும்பத் திரும்ப பாலியல் ரீதியான கொடூரங்களை சிப்பாய்கள் புரிவது போன்ற காட்சிகளை அந்தக் காணொலி வெளிப்படுத்துகிறது. இது குறித்து 'சனல் 4' இன் சார்பில் கெலும் மக்ரே தெரிவித்துள்ளமை வருமாறு-இலங்கையின் உள்நாட்டுப் போரின் துயரமான இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்தப் படங்களில் எந்த தவறுகளும் இல்லை. அந்த காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன் அவை மோசமான காட்சிகள். போரில் மரணங்கள் நிகழ்வது சிறிய சம்பவமாக இருக்கலாம். ஆனால் போரின் இறுதி சில மாதங்களில் அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல்களினால் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை ஒரு சிறிய விடயமல்ல. அந்த காட்சிகளில் இறந்த பெண் போராளிகளின் சடலங்கள் மீது திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை சிப்பாய்கள் செய்துள்ளனர்.இந்தக் காணொலி எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாக எமக்கு தெரியாது. போரின் இறுதியான இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவை படமாக்கப்பட்டிருக்கலாம்.ஒரு சிப்பாய் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். அதில் மற்றுமொரு சிப்பாய் சிங்களத்தில் பேசுகிறார்.அந்த காணொலியில் இருக்கும் சிப்பாய் அதிரடிப் படையினராக இருக்கலாம். அவர்கள் இறந்த புலிகளின் பெண் போராளிகளின் உடலில் பாலியல் வன்கொடுமைகளை செய்து சிரித்து ஆரவாரம் செய்கின்றனர்.அந்தப் பெண்கள் யார் என்பதும் உண்மையில் என்ன நடந்தது என்பதும் எமக்கு தெரியாது. அவர்கள் சீருடைகளையும் அணிந்திருக்கவில்லை. ஆனால் போராளிகள் என்று தோன்றுகிறது. இந்த படங்களை முன்னணி தடய அறிவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் ஆய்வு செய்ததுடன் படங்களில் உள்ள காயங்கள் உண்மையானவை எனவும் காணொலிகள் போலியானவை அல்ல என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.சடலங்களில் காணப்படும் சில காயங்கள் போர்க் களத்தில் ஏற்பட்டவையாக நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த காயங்கள் அப்படியானவையாக இருக்கவில்லை என அவர் ஆச்சரியம் தெரிவித்தார். இந்த காயங்கள், இவை ஒட்டுமொத்தப் படுகொலைகள்தான் என்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்துகின்றன என்றும் துப்பாக்கிகளினால் சுடப்பட்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.பிரித்தானியா தமிழர் அமைப்பு எமக்கு வழங்கிய டிஜிட்டல் காணொலிகளை பிரித்தானிய நீதிமன்றத்தில் பணிப்புரியும் சுயாதீமான மரியாதைக்குரிய ஒருவர் ஆராய்ந்தார் அவரும் அது உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினார். இந்த காணொலிகள் தொடர்பில் பதிலளித்த இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தினரை போன்ற சீருடையணிந்து பெரும்பான்மை சிங்கள இராணுவத்தினரை போல் சிங்களத்தில் பேசியுள்ளனர் எனக் கூறியது. சிறுவர்களை படையில் இணைத்து, பொதுமக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி, விடுதலைப் புலிகளும் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசாங்கம் தனது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதனை பயன்படுத்த முடியாது. விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் போரின் போது பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான காணொலிகளை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் அவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது எனவும் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.