பக்கங்கள்

23 மார்ச் 2014

உண்மையை ஏற்று வரலாறு படைத்தது சிங்கள படை!

பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் இராணுவச் சிப்பாய்களை துன்புறுத்திய இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சில இராணுவ அதிகாரிகளை கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் சிப்பாய்களை இராணுவ அதிகாரிகள் துன்புறுத்துவதாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் காட்சியில் தோன்றிய பெண் சிப்பாய்களில் ஒருவரும் தமிழ் பெண்கள் அல்ல என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது ஓர் பாரிய குற்றச் செயல் எனவும் முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளோ அல்லது பெண் சிப்பாய்களோ இதுவரையில் முறைப்பாடு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுர முகாம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.