பக்கங்கள்

26 மார்ச் 2014

சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்-ஐ.நா.நிபுணர்குழு

இலங்கை தொடர்பா ஐ.நா விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் நிறுவப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2010ம் ஆண்டு தருஸ்மான் தலைமையில் இந்த விசேட நிபுணர் குழு நிறுவப்பட்டு விசாரணை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் குழுவே யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணைகள் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்தும் எனவும், 2009ம் ஆண்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு போதியளவு ஆளணி பலமும், நிதி ஒதுக்கீடும் தேவை எனவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது. மர்சூகீ தருஸ்மான், யாஸ்மீன் சூகா மற்றும் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் கனேடிய ஊடகம் ஒன்றில் எழுதியுள்ள பத்தியில், விசாரணைகளை நடாத்த தீர்மானம் நிறைவேற்றுவது மட்டும் போதுமானதல்ல எனவும் அதற்கான நிதி உதவியையும், ஆளணி வளத்தையும் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படாவிட்டால், அது வேறும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடுமெனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமைகள் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.