பக்கங்கள்

24 மார்ச் 2014

வடக்கின் நிலைமை கவலையளிக்கிறது!

வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக முதலமைச்சர், வடக்கு கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் கோரியுள்ளார். வடக்கில் மீளவும் கடுமையாக இராணுவம் குவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகளவில் இராணுவத்தினரை குவிப்பதனாது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை. வடக்கின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைப்புக்கைள மேற்கொண்டு வருவதாகவும், இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் இராணுவ முகாம்கள் காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.