பக்கங்கள்

07 ஜனவரி 2014

யாழை கலக்கிய கொள்ளைக் குழுவில் இளம் பெண்!

யாழ் மாவட்டத்தை கலங்கடித்த 'ஆவ' எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 16பேர் ஆயுதங்களுடன் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவு பலவற்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இப்பெண் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. இரவு வேளைகளில் குறித்த பெண் நடமாடுவதாகவும், கொக்குவில் பிறவுன் வீதியை சேர்ந்த ராஜகுமார் ஜெனிட்டா என்கிற (வயது 23) என்பவரே இவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தேடியதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.